சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனரும் முதன்மை செயலாக்க திட்ட இயக்குனருமான ஏ.சி.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிப்பதாவது
சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை பல்வேறு
தடைக்கற்களையும். இன்னல்களையும் தகர்த்தெறிந்து உயர்நிலைக்கு வந்துள்ளது.வெற்றியும் பெற்று விட்டது.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் சவரிமுத்து அறக்கட்டளை சார்பாக எந்த நிதியும் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட ஒருவரால் செய்தி வெளிவந்தது .
பல வருடமாக காத்திருந்து பலர் வருத்தத்தில் இருந்தது உண்மைதான் .

அறக்கட்டளையின் வாழ்வாதார நிதியை உறுப்பினர்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சி வெகு சீக்கிரம் நடைபெற உள்ளது.
விழாவுக்கான பூர்வாங்க ,ஆக்கப்பூர்வமான பணிகள் லீடர்கள் மூலம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது
முறையான அறிவிப்பு நாளிதழ்கள்- தொலைகாட்சிகள் வாயிலாக விரைவில் அறிவிக்கப்படும்
விழாவன்று உறுப்பினர்களோடு சேர்ந்து வெற்றியை பிரமாண்டமாக கொண்டாடுவோம்.
இதுவரை பொறுமையாக காத்திருந்த அனைத்து குடும்பத்தினருக்கும் எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் .
என ஏ.சி.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.