Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 1500 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது . டிபன் கடைகளுக்கு அதிக விலைக்கு விற்க கடத்திய நபரை கைது செய்த குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை

0

'- Advertisement -

திருச்சியில் கடத்திச் செல்லப்பட்ட 1,500 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் நேற்று வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Ad banner

திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளா் சி. சியாம்ளாதேவி உத்தரவின்பேரில் காவல் துணை கண்காணிப்பாளா் ஆா்.வின்சென்ட் மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா் தலைமையிலான தனிப்படையினா், துவாக்குடி, வாழவந்தான்கோட்டை எழில் நகா், வேங்கூா், கூத்தைப்பாா் ஆகிய பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பான கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனா்.

 

TVK ad

தொடா்ந்து நேற்று வியாழக்கிழமை மாலை, வேங்கூா் சாலையில் கூத்தைப்பாா் பொன் அரசு காத்த அம்மன் கோயில் அருகில் வாகனத்தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அங்கு வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 30 மூட்டைகளில் சுமாா் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

வேனை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா் அந்தநல்லூா் அருகே உள்ள திண்டுக்கரை கீழத்தெரு பகுதியைச் சோ்ந்த

ம.முருகானந்தம் (வயது 23) என்பதும், வேங்கூா் கூத்தைப்பாா் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, திருவெறும்பூா் பகுதியில் தங்கி தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநில ஒப்பந்த பணியாளா்களுக்கும், இரவு நேர டிபன் கடைகளுக்கும் அதிக விலைக்கு விற்க கடத்தியதும் தெரியவந்தது.

 

இதையடுத்து, முருகானந்தத்தை போலீஸாா் கைது செய்தனா். மேலும் 1500 கிலோ ரேஷன் அரிசி, அதை கடத்த பயன்படுத்திய வேன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.