புதிதாக தொடங்கப்படவுள்ள இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியினை சிறப்பான முறையில் அமைப்பது உள்ளிட்ட ஆலோசனை கூட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது .
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், தகவல் தொழில்நுட்ப பிரிவின் பணிகளை துரித படுத்துவது மற்றும் புதிதாக தொடங்கப்பட உள்ள இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியினை சிறப்பான முறையில் அமைப்பது குறித்தும்,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்முமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் சிறப்பான ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாலன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் சி.சின்னசாமி, மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், மாவட்ட அவைத்தலைவர் அருணகிரி, மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, மாவட்ட துணை செயலாளர்கள் சுபத்ரா தேவி, பொன்னுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் சூப்பர் டி.என்.டி.நடேசன், இராவணன், அசோகன், டி.என்.சிவகுமார், .பழனிசாமி, கண்ணூத்து பொன்னுசாமி, எஸ்.கே.டி.கார்த்திக், ந.அன்பரசன், நகர செயலாளர்கள் பவுன்.ராமமூர்த்தி, எஸ்.பி..பாண்டியன், பொன்னி சேகர், பகுதி செயலாளர்கள் எம்.பாலசுப்ரமணியன், எஸ்.பாஸ்கர் (எ) கோபால்ராஜ் எ.தண்டபாணி, பேரூர் செயலாளர்கள் பிச்சை பிள்ளை, ஜெயசீலன், ஜேக்கப் அருள்ராஜ், முத்துக்குமார், திருமலை சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் இஸ்மாயில், சாந்தி, விஜயா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜமணிகண்டன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சண்முக பிரபாகரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வமேரி ஜார்ஜ், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அருண் நேரு, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் டோமினிக் அமுல்ராஜ், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ்குமார், 40வது வட்ட செயலாளர் ரோஷன்,39 வட்ட பொறுப்பாளர் யோகானந்தம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.