திருச்சியில் தம்பதியை தற்கொலைக்கு தூண்டியதாக
திருச்சி இளைஞர் கைது.
காந்தி மார்க்கெட் போலீசார் அதிரடி நடவடிக்கை.
திருச்சி காந்தி மார்க்கெட் அருகேயுள்ள வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ச. மோகன்ராஜ் (வயது 35). நிதிநிறுவன (பைனான்ஸ்) தொழில் செய்து வந்தார். பகுதிநேரமாக மருந்து விற்பனை பிரதிநிதியாகவும் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி எஸ்தர்ஜெனட் (வயது 30). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில், நேற்று முன் தினம் திங்கள்கிழமை மாலை இருவரும் வீட்டில் சேலை மற்றும் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். நீண்ட நேரமாக வீடு திறக்கப்படாத நிலையில் அக்கம் பக்கத்தினர் வீட்டில் சென்று பார்த்தபோது விவரம் தெரியவந்துள்ளது.
தகவலின் பேரில் காந்திச்சந்தை காவல் நிலைய போலீஸார் நிகழ்விடம் சென்று உடல்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் மோகன்தாஸ் அதே பகுதியைச் சேர்ந்த ஆர். தினேக்குமார் (35) என்பவரிடம் ரூ.16 லட்சம் கடன் வாங்கி, அந்தப் பணத்தை சிலருக்கு வட்டிக்கு கொடுத்துள்ளார். இவர் கொடுத்த இடங்களில் வட்டி மற்றும் அசல் பணம் திரும்ப வரவில்லை. இதனால் மோகன்தாஸ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதற்கிடைடே பணத்தை கொடுத்தவர் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இதனால் மோகன்தாஸ் தனது வீட்டை அடமானமாக வாங்கிய பணத்துக்கு எழுதிக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் பணம் கொடுத்தவர் வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மோகன்தாசும், அவரது மனைவியும் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இதன்காரணமாக கணவன் மனைவிக்கிடையே குடும்ப தகராறும் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் கணவன், மனைவி 2 பேரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளனர். இது குறித்து, தற்கொலை செய்த தம்பதியர் எழுதி வைத்ததுடன், காணொலியும் பதிவு செய்து வைத்தாக கூறப்படுகிறது.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தற்கொலைக்கு தூண்டியாதாக அதே பகுதியைச் சேர்ந்த தினேஷை கைது செய்தனர்.