திருச்சியில் வேட்டையன் படம் வெளியிட்டை வழக்கறிஞர் சுதர்சன் தலைமையில் ஆயிரம் கிலோ மலர் தூவி கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்
வேட்டையன் படம் இன்று வெளியிட்டதை தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாட்டம் .

ரஜினி படத்துக்கு ஒரு டன் மலர்களை தூவிய ரசிகர்கள் .
தியேட்டரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டை என் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
திருச்சியில் பல்வேறு தியேட்டர்களில் வெளியானதையடுத்து ரஜினி ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதை முன்னிட்டு திருச்சி எல். ஏ.மாரிஸ் திரையரங்கில் இன்று
திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்ற மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் சுதர்சன் தலைமையில் மாவட்ட செயலாளர் எம். கலில் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் பிரம்மாண்டமான வேட்டையன் பிளக்ஸ் பேனருக்கு ஜே.சி.பி இயந்திரம் மூலம் ஒரு டன் மலர்களை தூவி ரசிகர்கள் கொண்டாடினர்.
அப்போது ஆரவாரம் இட்டு ரசிகர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ராயல் ராஜு , ஸ்ரீ அம்மன் கார்ஸ் எம்.சிவா , மாவட்ட நிர்வாகிகள் கர்ணன் ,எஸ்.டி.ராஜ், பாலன், மனோகர், ராஜ்குமார், நோபல், அலெக்ஸ், விமல்ஜித் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் வேட்டையன் படம் வெளியானதை யொட்டி ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.