திருச்சியில் காமராஜரின் பிறந்த நாள் அன்று அவரது சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த பட உள்ளது.
திருச்சியில் திமுக சார்பில் காமராஜரின் 121வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர் .

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெருந்தலைவர் காமராசரின் 121.வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் அவரது பிறந்தநாளான 15-ந் தேதி ( திங்கட்கிழமை) காலை 8 மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது உருவச்சிலைக்கு கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையிலும், க.வைரமணி, காடுவெட்டி ந.தியாகராஜன், மு.அன்பழகன் ஆகியோர் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைசெயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் பொறுப்பளர்கள் கழக முன்னோடிகள், செயல் வீரர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு கர்மவீரர் காமராசர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டுகிறோம்.
என அவர்கள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.