Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக எம்எல்ஏ கதிரவனின் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் என் மகளுடன் சேர்த்து 7 பேரை கொன்றுள்ளனர். உரிய விசாரணை நடத்த நீதிமன்றத்தை நாட உள்ளேன் .என் மகளின் சாவில் உள்ள மர்மங்கள். முன்னணி பத்திரிக்கை, ஊடகங்கள் நிறுவனங்கள் செய்தி வெளியிடாத காரணம் பணமா? பயமா ? மாணவியின் தந்தை கதறல் .

0

திருச்சி சமயபுரம் அருகே செயல்பட்டு வரும் திமுக எம்எல்ஏ கதிரவனுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரியம்மன் தெருவை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் பாலாஜி என்பவரின் மகள் தாரணி (வயது 19) விடுதியில் பி.டெக் ஐடி முதலாம் ஆண்டு படித்து வந்தார் .

2 நாளைக்கு காய்ச்சல் என்பதால் தனது துறை பேராசிரியரிடம் விடுமுறை கேட்டு அவர்கள் விடுமுறை தராததால் மதியம் 12 மணி அளவில் தனது தந்தையை அழைத்துச் செல்ல வருமாறு கூறி போன் செய்து விடுதியில் தங்கியுள்ளார்.

மாலையில் விடுதிக்கு திரும்பிய தோழிகள் தாரணி தங்கியிருந்த அறை உள்பக்கம் பூட்டப்பட்டு இருப்பதாக நிர்வாகத்துக்கு தகவல் கூறி உள்ளனர். அவர்கள் கதவை உடைத்து உள்ள சென்றபோது மாணவி தாரணி ஜன்னல் கம்பியில் தனது துப்பட்டாவால் தூக்கு மாட்டி இருந்ததை கண்டு அவரது உடலை மீட்டு படுக்கையில் வைத்து இருந்ததாக கூறப்பட்டது .

மாணவி தந்தை பாலாஜி 3 மணி அளவில் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி சென்று தனது மகளை பார்க்க வேண்டும் என கூறியும் அனுமதிக்கவில்லை .
மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை அன்று மாணவியின தாயும் தந்தையும் கதறி அழுத்தது கான்போரை கண் கலங்க வைத்தது .

பிரேத பரிசோதனை முடிந்து தனது சொந்த ஊரில் மகளின் உடலை நல்லடக்கம் செய்தனர். பெற்றோர்கள் .

அவர்களிடம் போனில் தொடர்பு கொண்டு நாம் பேசிய போது இன்னும் தூக்கம் அடங்காமல் அழுது கொண்டே நம்மிடம் பேசினர், அப்போது அவர்கள் தங்கள் மகளின் சாவில் உள்ள மர்மங்கள் குறித்து கூறியதாவது :-

1.தனது மகள் தற்கொலை செய்து கொள்ள ஒரு கோழை அல்ல.. மிகவும் தைரியமான பெண்.

2. நான் மதியம் மூன்று மணி முதல் காத்திருந்தும் எனது மகளை சந்திக்க அனுமதிக்காதது ஏன் ?

3. மகளின் அறை உள்பக்கம் பூட்டி இருப்பது தெரிந்தும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இவர்களே அறை கதவை உடைத்து உடலை இறக்கியதாக கூறுவது ஏன் ?

4. கழுத்தில் துப்பட்டாவால் இறுக்கியது போன்று இல்லை. பெல்டால் இறுக்கி கொலை செய்தது போன்று கழுத்தில் அச்சு பதிந்துள்ளது .
5. சுவற்றின் ஓரம் உள்ள ஜன்னலில் எப்படி தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முடியும் .

இன்னும் பிரேத பரிசோதனை அறிக்கை வரவில்லை . நாங்கள் கல்லூரி வளாகத்தில் இருந்தபோது அங்கு பணியாற்றும் சில நேர்மையான ஊழியர்கள் உங்கள் மகளின் சாவு 7வது இதேபோன்று ஆறு மாணவிகள் இறந்துள்ளனர். ஆனால் நிர்வாகம் வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டது என கூறினார்.

 

 

மேலும் முன்னணி பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் இந்த செய்தி அவர்களின் பண பலத்தால் வெளிவராமல் பார்த்துக் கொண்டனர்.

கதிரவன் ஆளுங்கட்சி எம்எல்ஏ என்பதாலும், பெரும் பண முதலை என்பதாலும் இதுபோன்று காவல்துறையும் இவர்கள் விட்டு வைப்பார்களா என தெரியவில்லை .

எங்கள் மகளின் மரணத்தை இதுவரை எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை . இதுபோன்று ஆறு மனைவிகள் உயிர் இழந்த உள்ளனர் என்றால் இங்கு என்ன நடக்கிறது.

எனவே உரிய நீதி விசாரணை நடத்த நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை வந்தால் அதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்.

தவறு செய்தவர்களை எனது மகளின் ஆன்மா என்றும் மன்னிக்காது என கண்ணீர் மல்க கூறினர் .

Leave A Reply

Your email address will not be published.