Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சிஅரசு மருத்துவமனை வளாகத்தில் பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது.

0

'- Advertisement -

 

திருச்சிஅரசு மருத்துவமனை வளாகத்தில்
பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது.

Suresh

திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தின் வளாகத்தில் நேற்று ஸ்ரீரங்கம் போச்சம்பட்டி இனாம் புலியூர் பகுதியை சேர்ந்த குமார் ( வயது 35) என்ற நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரை பார்ப்பதற்கு வந்த போது எதிர்பாராத நேரத்தில் அவரது பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்த கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆரல்வாய்மொழி மருத்துவர் நகரை சேர்ந்த பார்த்திபன் (வயது 20) என்ற நபரை குமார் கையும் களவுமாக பிடித்தார்.

உடனடியாக அவரை அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ஒப்படைத்தனர். பின்பு பறிக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து குமாரிடம் காவல்துறை ஒப்படைத்தனர். பின்னர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட பார்த்திபனை கைது செய்து அவர் மீது அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.