Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் போதை மருந்து, மாத்திரைகள் விற்ற வாலிபர் இருசக்கர வாகனத்துடன் கைது.

0

 

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் போதை மருந்து, மாத்திரைகளுடன்
வாலிபர் கைது.

மோட்டார் சைக்கிள் , போதை மருந்துகள் பறிமுதல்

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கொல்லாங்குளம் அருகில் யானை பம்ப் பகுதியில் போதை மருந்து, மாத்திரைகள் இருசக்கர வாகனத்தில் வந்து விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் சந்தேகத்துக்கிடமாக இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் போதை மாத்திரைகள், மருந்துகள் விற்றது தெரிய வந்தது.
அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் திருச்சி கிராப்பட்டி அன்புநகரை சேர்ந்த பாலாஜி (வயது 24) என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து இரு சக்கர வாகனம், போதை மாத்திரைகள், மருந்துகள், சிரஞ்சுகள், அதற்காக பயன்படுத்தக்கூடிய டெர்மினல் வாட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர் .

Leave A Reply

Your email address will not be published.