திருச்சியில் பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது .
திருச்சியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர் .
இதில் திருச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அதிமுக அமைப்பு செயலாளருமான டி. ரத்தினவேல் காஜாமலை ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் செம்பட்டு ஆபட் மார்சல் மேல்நிலைப் பள்ளியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தில்நாதன் கேகே நகர் மாநகராட்சிப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை நிறைவேற்றினார் .
திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் மு. பரஞ்ஜோதி எட்டரை கோயில் திடல் அருகில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார் .
மேலும் திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு , மகேஷ் பொய்யாமொழி, சிவா எம்பி , மேயர் அன்பழகன். முன்னாள் மேயர் சாருபால தொண்டைமான் உள்ளிட்ட விஐபிகளும் , முதல் முறை வாக்காளர்களும் ஆர்வமாக வாக்களித்தனர்.