லால்குடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள தாளக்குடி ஊராட்சியில் தொடங்கி அப்பாதுரை, எசனக்கோரை திருமணமேடு, பெரியவா்சீலி, இடையாற்று மங்கலம், கூகூா், சாத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அவா் பிரசாரம் செய்தாா்.
அப்போது கூகூர் பகுதியில் அருண்நேரு பேசியதாவது:- தமிழ்நாட்டு மக்களுக்கு இலவசங்களை வழங்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முட்டுக்கட்டை போடுகிறது. நமது வரிபணத்தை முட்டுக்கட்டை போட இவா்கள் யாா்? எனவே இலவசங்கள் தொடரும், மக்கள் அச்சமின்றி வாழவும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.
அப்போது திருச்சி மத்திய மாவட்டச் செயலா் வைரமணி, லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன், விசிக மாவட்டச் செயலா் குரு அன்புச்செல்வன் மற்றும் கூட்டணிக் கட்சி, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் உடனிருந்தனா்.