Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம்

0

 

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணி ஒருவர் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கோ-அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் கண்டேன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.