Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஜோசப் லூயிஸ் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார் துரை வைகோ

0

 

என்னை வெற்றி பெற செய்ய பம்பரமாக சுழன்று பணியாற்ற நீங்கள் இருக்கீறீர்கள் என்று துரை வைகோ பேசினார்
திருச்சி ஆர்.சி பள்ளி அருகில் டி.எம்.எஸ்.எஸ் அரங்கத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் மற்றும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜ் தலைமை தாங்கி ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ ஆதரவு திரட்டி பேசினார்.

பின்னர் துரை வைகோ பேசும்போது, திருச்சி நாடாளுமன்ற தொகுதியை எனக்கு விட்டுக் கொடுத்த காங்கிரசாருக்கு நன்றி மேலும் உங்களில் ஒருவனாக என்னை இணைத்துக் கொண்டதற்கு நன்றி.

காங்கிரஸ் – ம.தி.மு.க. ஆகிய 2 இயக்கங்கள் இடையேயான நட்பு இல்லை, 2 குடும்பங்களுக்கு இடையேயான உன்னத நட்பு. திருச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சி 5 முறை போட்டியிடத்தில் ஒருமுறை மட்டுமே தோல்வியை தழுவியுள்ளது. நான் வெற்றி பெற்ற பிறகு அமையும் அலுவலகம் ம.தி.மு.க. அலுவலகமாக மட்டுமல்லாது காங்கிரஸ், தி.மு.க. அலுவலகமாக இருக்கும்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் என்னை வெற்றி பெற செய்ய பம்பரமாக சுழன்று பணியாற்ற நீங்கள் இருக்கீறீர்கள். எங்கள் தாத்தா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் எனவே நான் காங்கிரஸ் பாரம்பரியத்தை கொண்டவன். என் தோளில் ம.தி.மு.க. துண்டைத் தவிர வேறு எந்த துண்டையும் அணிந்ததில்லை. தற்போது காங்கிரஸ் துண்டை அணிந்திருக்கிறேன் ஏனெனில் நான் பாரம்பரிய காங்கிரசில் இருந்து வந்தவன் இளம் தலைவர் ராகுல் காந்தியை தலைவராக பெற்றுள்ளீர்கள். பிரதம வேட்பாளர் யார்? என்று கேள்வி எழுந்த போது ராகுல் காந்தி பெயரை முன்மொழிந்தவன் நான். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. சார்பில் மேயர் அன்பழகன், திருச்சி மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, பூமிநாதன் எம்.எல்.ஏ,மதிமுக துணை பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்ட மதிமுக செயலாளர் வெல்லமண்டி சோமு,மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், முன்னாள் மாவட்டத் தலைவர் ஜவகர், முன்னாள் பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்,மாநில பொதுச் செயலாளர்கள் வக்கீல் சரவணன், ஜி.கே.முரளி. முன்னாள் மேயர் சுஜாதா, மாநிலத் துணைத் தலைவர் சுப .சோமு,மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், முன்னாள் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர்,வட்டாரத் தலைவர் கள்ளிக்குடி சுந்தரம்,
சிக்கல் சண்முகம் மெய்ய நாதன் புத்தூர் சார்லஸ்,வில்ஸ் முத்துகுமார் , முன்னாள் கோட்டத் தலைவர்கள் ரவி , ஜோசப் ஜெரால்டு, ஓவியர் கஸ்பர், ஆனந்தராஜ், ராஜ்மோகன், பீமநகர் காசிம், செல்வகுமார் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ். இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் சந்திரன், முன்னாள் கவுன்சிலர் ஹேமா முல்லை ராஜன், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் சிவா, அண்ணா சிலை விக்டர். எத்திராஜ் மலைக்கோட்டை சேகர், சரவணன் சேவாதளம் ஜெகதீஸ்வரி , அப்துல் குத்தூஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.