பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் .
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை
திருச்சி பார்வையிழப்பு தடுப்பு சங்கம்
சோழா ரோட்டரி சங்கம் மற்றும்
செயின்ட் மேரீஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி இனைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இம்முகாமிற்கு
Rtn அமலச்சந்திரன் வழக்கறிஞர்,
Rtn . பரிமணம் முருகன்,
பொன்மலைப்பட்டி கிராம தலைவர் மில்டன் குமார்,
திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோ.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகிக்க செயின்ட் மேரீஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தாளாளர் எட்வின் பால்ராஜ் தலைமையில் திருநகர் பங்கு தந்தை அருட்பணி ரெட்சகராஜ் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கண் பார்வை குறித்து பரிசோதனை செய்து கொண்டனர்.
கலந்து கொண்ட பார்வை குறைபாடுடையவர்கள் 20 நபர்கள் அறுவை சிகிச்சை மற்றும் மேல் சிகிச்சைக்கு ஜோசப் கண் மருத்துவர்கள் முன்னிலையில் மருத்துவ வாகனம் மூலம் அழைத்து செல்லப்பட்டார்கள்.
முன்னதாக முகாமிற்கு வந்திருந்த அனைவரையும் செயின்ட் மேரீஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி ஆசிரியை காயத்ரி வரவேற்றார் .
முகாம் நிகழ்ச்சியை பள்ளி முதல்வர் மேரி அப்சரா மற்றும் ஆசிரியைகள் சிறப்பாக செய்திருந்தனர்