Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாலக்கரையில் டாஸ்மார்க் காசாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 3 பேர் கைது. இருசக்கர வாகனம் பறிமுதல்

0

'- Advertisement -

 

பாலக்கரையில் டாஸ்மார்க் காசாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 3 பேர் கைது.

Suresh

திருச்சி தியாகேஸ்வரி நகரை சேர்ந்தவர் ரவி (வயது 58).இவர் திருச்சி பாலக்கரை பகுதி மணல் வாரி துறை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பாலக்கரை கீழப்புதூர் மெயின் ரோடு அருகில் வரும் பொழுது ரவியை வழி மறித்து அவரிடம் கத்தி முனையில் ரூபாய் 2000 பணத்தை பறித்துக் கொண்டு மூன்று பேர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து ரவி பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சந்திரசேகர் (வயது 30) சரவணா பிரபு (வயது 23) மதன்ராஜ் (வயது 33) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தையும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.