Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் சாலை ஓரத்தில் முகம் சிதைந்த நிலையில் ஆண் பிணம் . கொலையா போலீசார் விசாரணை.

0

 

திருச்சி ஜல்லிக்கட்டு சாலை அருகே முகம் சிதைந்த நிலையில் ஆண் பிணம்.

திருச்சி நீதிமன்றம் அருகில் முகம் சிதைந்த நிலையில் ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி நீதிமன்றம் வளாகத்தின் பின்பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு சாலையின் ஓரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் முகம்சிதைந்த நிலையில் கிடந்தது.இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் திருச்சி செசன்ஸ்கோர்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் இவர் யார் ?எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.