Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 3 மாதத்தில் 2வது கணவரை பிரிந்து முதல் கணவரிடம் தஞ்சம் அடைந்த பெண் .

0

'- Advertisement -

 

திருவெறும்பூரில்
திருமணமான 3 மாதத்தில் 2வது கணவரை பிரிந்த இளம்பெண்
வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய முதல் கணவருடன் தஞ்சம்.

Suresh

திருச்சி துவாக்குடி ரவுத்தான் மேடு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 42). இவருக்கும் சுகன்யா (33) என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன் பின்னர் குமார் மனைவியை ஊரில் விட்டு விட்டு வெளிநாட்டு வேலைக்கு சென்றார்.

இந்த நிலையில் திருச்சி காட்டூர் பாத்திமாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரபு (வயது 39) என்பவருடன் சுகன்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் கடந்த செப்டம்பர் 17 ம் தேதி சுகன்யா ஜெயபிரபுவை இரண்டாவதாக திருமணம் செய்தார்.
பின்னர் இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் வெளிநாடு சென்ற அவரது முதல் கணவர் குமார் சமீபத்தில் ஊர் திரும்பினார். இதனைத்தொடர்ந்து சுகன்யா தனது முதல் கணவருடன் செல்ல முடிவு செய்து கடிதம் எழுதிவிட்டு மாயமானார்.

கடிதத்தில் இரண்டாவது கணவருக்கு தங்களுடன் வாழ பிடிக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் சுகன்யா தனது முதல் கணவருடன் தஞ்சம் அடைந்திருந்தது தெரியவந்தது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறும் போது, முதல் கணவருடன் சுகன்யா சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் அவருக்கு குழந்தை இல்லாததை முன்னிறுத்தி ஜெய பிரபு அவரை வற்புறுத்தி திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் முதல் கணவர் ஊர் திரும்பியதும் மனம் மாறி முதல் கணவருடன் சென்றிருக்கலாம் என கூறியுள்ளனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.