திருச்சியில் தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு. தட்டி கேட்ட பெண்ணை தாக்கிய குடும்பத்தினர் 7 பேர் 7 பிரிவில் கைது.
தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு:
தட்டிக்கெட்ட பெண்ணை கொலை செய்ய முயற்சி
கணவர் குடும்பத்தினர் 7 பேர் மீது வழக்கு.
திருச்சி காஜாமலை ஜே.கே.நகர் செண்பக தெருவை சேர்ந்த முஸ்தபா-சபீனா தம்பதியின் மூத்த மகன் அப்துல் ரகுமான், இளைய மகன் அப்துல்ரஹீம். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அப்துல் ரகுமானின் மனைவி சுல்தான் பீவி ஷகானா(வயது 23). அப்துல் ரகீமின் மனைவி சபீதா. இதில் அப்துல்ரகுமானுக்கும் சுல்தான் பீ ஷகானாவுக்கும் கடந்த 9-12-2021 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, 50 பவுன் நகைகள், ரூ.15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக சுல்தான் பீ ஷகானாவின் பெற்றோர் கொடுத்துள்ளனர்.
திருமணத்துக்கு பிறகு அப்துல்ரகுமான் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் சுல்தான் பீ ஷகானா தனது கணவர் வீட்டில், மாமனார், மாமியார், கொழுந்தன், அவருடைய மனைவி ஆகியோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். இந்தநிலையில் அப்துல் ரகுமான் வெளிநாட்டில் இருந்த நேரத்தில் அவருடைய தம்பி அப்துல்ரஹீம், சுல்தான் பீ ஷகானாவின் படுக்கை அறைக்கு சென்று அவரிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர், தனது மாமியார் சபீனாவிடம் புகார் செய்துள்ளார்.
அதற்கு ஷபீனாவும், அப்துல்ரகுமானின் மனைவி சபீதாவும், அட்ஜஸ்ட் செய்து போகும்படி கூறியுள்ளனர். இதற்கிடையே வெளிநாட்டில் இருந்து திரும்பிய சுல்தான் பீ ஷகானாவின் கணவர் அப்துல் ரகுமான், வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்துள்ளார்.
அத்துடன், அவர் தனது தம்பியின் மனைவி சபீதாவுடன் கள்ள உறவில் இருந்துள்ளார். இதுபற்றி அறிந்த சுல்தான் பீ ஷகானா தனது கணவரிடம் அதுபற்றி கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல் ரகுமான் தனது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் வயிற்றில் எட்டி உதைத்து, கொலை செய்யமுயன்றதாக தெரிகிறது. இதனால் சுல்தான் பீ ஷகானாவின் கர்ப்பம் கலைந்துள்ளது. அத்துடன் அப்துல்ரகுமான் மற்றும் அவருடைய உறவினர்கள் சுல்தான் பீ ஷகானாவை அடித்து கொடுமை படுத்தியதுடன் அவரை வீட்டை விட்டு விரட்டியுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், சுல்தான் பீ ஷகானாவின் கணவர், மாமியார், மாமனார், கொழுந்தன் மற்றும் அவருடைய மனைவி, கணவரின் தாய்மாமா மற்றும் அவருடைய மனைவி ஆகிய 7 பேர் மீது மோசடி, கொலைமுயற்சி உள்பட 7 பிரிவுகளின் கீழ் பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.