திருச்சி மாநகரில் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் மற்றும் போதை மாத்திரை விற்கப்படுவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் திருச்சி மாநகரில் பல்வேறு போலீஸ் நிலையங்கள் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட இடங்களில் போலீசார் போதை மாத்திரை விற்பவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி பகுதியில் போதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த இபி ரோடு பகுதியை சேர்ந்த சச்சின் (வயது 22) வரகனேரியை சேர்ந்த உதயசங்கர் (வயது 20 )ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து பணம், ஊசிகள் மருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர்.