Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் சசிகலாவின் பிறந்த நாளை முன்னிட்டு சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவர் ஒத்தக்கடை செந்தில் தலைமையில் சிறப்பு பூஜை, அன்னதானம்.

0

 

திருச்சியில் வி.கே.சசிகலா 69வது பிறந்தநாள் விழா கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை செய்து மரக்கன்று கொடுத்து நிர்வாகிகள் கொண்டாட்டம்.

வி.கே.சசிகலா ஜெயலலிதாவின் தோழியாகவும், அதிமுகவின் முக்கிய நபராக கருதப்பட்டவர்.
கட்சியில் இவரின் ஆதரவாளர்களால் சின்னம்மா என்றும் புரட்சித்தாய் என்று அழைக்கப்பட்டார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் இவரை பொதுச் செயலாளர் அதிமுகவில் அறிவித்தனர்.

வி.கே.சசிகலா திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 1954 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி பிறந்தார். இவரது கணவர் ம. நடராசன்.
இன்று சசிகலாவின்
69ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று காலை திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையம் அருகில் உள்ள வழிவிடு வேல் வேல்முருகன் கோவிலில் ஒத்தக்கடை செந்தில் தலைமையில்
புரட்சித்தாய் சசிகலாவின் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் மரக்கன்றுகளும் வழங்கினர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் நாமக்கல் கோபால் அசோக்குமார், குமார், தன்ராஜ், ஆறுமுகம், சரவணன், சிவா, முனியாண்டி உட்பட பல திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.