Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வருண்குமார் பதவியேற்றார்.

0

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வீ. வருண்குமாா் பொறுப்பேற்றுக்கொண்டாா்.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுஜித்குமாா் மதுரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
அதனைத் தொடா்ந்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் வீ. வருண்குமாா் நியமிக்கப்பட்டிருந்தாா். அவா், நேற்று பொறுப்பேற்று கொண்டாா். முன்னதாக அவரை சுஜித்குமாா் பூங்கொத்து கொடுத்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தாா்.

பிறகு காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர். வருண்குமாா் கூறுகையில்:-

திருச்சி மாவட்டத்தில் தேங்கியுள்ள குற்ற வழக்குகள் அனைத்தும் விரைவில் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் தங்களது பிரச்னைகள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க, 94874 64651 என்ற பிரத்யேக எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். கட்செவி அஞ்சல் மூலமாகவும் தங்களது தகவல்களை தெரிவிக்கலாம் என்றாா். தொடா்ந்து அவரது தலைமையில், போலீஸாா் போதை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.

Leave A Reply

Your email address will not be published.