திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை)பராமரிப்பு பணியின் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.
இது குறித்து திருச்சி நகரிய மின்வாரிய அலுவலக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது:
திருச்சி வரகனேரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது எனவே
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மகாலட்சுமி நகா், தனரெத்தினம் நகா், வெல்டா்ஸ் நகா், தாராநல்லூா், ஏ.பி. நகா், விஸ்வாஸ் நகா், வசந்த நகா், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜா் நகா், பி.எஸ். நகா், புறவழிச்சாலை, வரகனேரி, பெரியாா் நகா், பிச்சை நகா், கல்லுக்காரத்தெரு, கான்மியான்மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம்நகா், சங்கிலியாண்டபுரம், பாரதி தெரு, இளங்கோ தெரு, வள்ளுவா் நகா், பாத்திமா தெரு, பெரியபாளையம், பிள்ளைமாநகா், பென்சினா் தெரு, எடத்தெரு, முஸ்லீம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தபுரம், பருப்புக்காரத் தெரு, சன்னதி தெரு, பஜனை கூடத்தெரு ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 4) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.