Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கூத்தூர் விக்னேஷ் வித்யாலயா பாலிடெக்னிக்கில் ஜோசப் கண் மருத்துவமனை, அனைத்து ரோட்டரி சங்கங்களின் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம்.

0

 

திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள், திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றின் சார்பில் கூத்தூர் விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

ரத்த வங்கிகளின் உதவியுடன் நடைபெற்ற இம்முகாமில் கல்லூரி மாணவர்கள்,
ஜோசப் கண் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் மூலம் சுமார் 120 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.

இதையொட்டி நடைபெற்ற விழாவில் எக்ஸ் எல் குழுமத் தலைவரும் ரோட்டரி முன்னாள் ஆளுநருமான முருகானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடையாளர்களை வாழ்த்தி பாராட்டினார். மேலும் கண்தானம் குறித்த விழிப்புணர்வு உரையாற்றப்பட்டது.

 

 

RSO இயக்கம் திருச்சி பட்டர்பிளை ரோட்டரி சங்கத்தினரால் கடந்த வருடம் ஜூலை ஒன்றாம் தேதி துவங்கப்பட்டது.
கடந்த ஓராண்டில் மட்டும் 750 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி குழுமத் தலைவர் சுப்பிரமணி ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபா பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.