திருச்சி கருமண்டபம் அருகே
வாலிபர்களை தாக்கி நகை, மோட்டார் சைக்கிள் பறிப்பு
சிறுவன் உள்பட 2 பேர் கைது.
திருச்சி சின்னகோதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுஜித்(வயது 25). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் தனது நண்பர் ஹரிபிரசாத் என்பவரை ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். கோரையாற்று பாலம் அருகே வந்த போது, 3 பேர் இவர்களை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். அத்துடன் சுஜித் தலையில் கல்லால் தாக்கியதுடன், அவருடைய மோட்டார் சைக்கிள், செல்போன், 1½ பவுன் சங்கிலி மற்றும் ஹரிபிரசாத் அணிந்திருந்த 4½ பவுன் சங்கிலி ஆகியவற்றை அவர்கள் பறித்துச்சென்றனர்.
இதுகுறித்து சுஜித் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார, அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது கருமண்டபம் பகுதியை சேர்ந்த அர்ஜுன்(வயது 23), அவருடைய நண்பர்கள் கார்த்திக் மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அர்ஜுனையும், சிறுவனையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும், செல்போனையும் மீட்டனர். தலைமறைவாக உள்ள கார்த்திக்கை தேடி வருகிறார்கள்.