திருச்சி கல்லக்குடியில் 200 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிப்பு
லால்குடி அருகே உள்ள கல்லக்குடி தபை பகுதியில் உள்ள ஒரு ஏரிக்கரையில் சாராயம் காய்ச்சுவதாக திருவெறும்பூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து
சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்னர் அப்பகுதியில் சோதனையிட்டபோது தபை ஏரிக்கரையில் சாராய ஊறல் இருப்பது கண்டறியப்பட்டது.
4 லிட்டர் வடிகட்டிய சாராயமும், 200 லிட்டர் சாராய ஊறலும் அங்கு இருந்தது. இதனை போலீசார் கைப்பற்றினர்.
பின்னர்
விசாரணை செய்த போது மேற்கண்ட சாராய ஊறலை லால்குடி கல்லக்குடி ராஜா டாக்கீஸ் எதிர்ப்புறம் உள்ள சிதம்பரம் சாலையில் வசிக்கும் தனபால் என்பவர் இந்த.ஊறலை போட்டு வைத்திருந்ததாக தெரிய வருகிறது. மேற்கண்ட நபர் தப்பி சென்று விட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சமீபத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷா சாராயம் குடித்து 18 பேர் பலியானார்கள். அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் சாராய வேட்டை தீவிர படுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கள்ளக்குடியில் சாராய ஊறல் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது