திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,
பள்ளிக்கல்விதுறை அமைச்சருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.கழக கூட்டம் நாளை 01/06/2023 வியாழன் மாலை 5 மணி அளவில் மாவட்ட கழக அவைத்தலைவர் என்.கோவிந்தராஜ் தலைமையில் மாவட்ட தி.மு.கழக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் முத்தமிழ் அறிஞர், தமிழின தலைவர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் அவரது புகழுக்கு மென்மேலும் மாண்பு சேர்க்கும் வகையில் சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், தலைமை கழகத்தால் தற்போது வரை அறிவிக்கப்பட்டுள்ள அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக உள்ளாட்சி அமைப்புகளின் துணை மேயர், மண்டல தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய, பேரூராட்சி பெருந்தலைவர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அனைவரும் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.