Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அரசு மருத்துவமனை நோயாளி மற்றும் 2 இளம் பெண்கள் திடீர் மாயம்.

0

 

திருச்சியில் 2 இளம்பெண்கள்

அரசு மருத்துவமனை நோயாளி திடீர் மாயமானதால் பரபரப்பு.

திருச்சி மணிகண்டம் ,
கொழுக்கட்டைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராசு. இவருடைய மகள் கீதா (வயது 21). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தந்தை ராசு கீதாவின் போனிற்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதனையடுத்து தனது மகளை காணவில்லை என மணிகண்டம் போலீஸ் ஸ்டேசனில் கீதாவின் தந்தை ராசு புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் திருச்சி திருவானைக்காவல் பஞ்சக்கரை ரோடு ஜே.ஜே.நகரை சேர்ந்த பரமசிவம் மகள் சத்யா (வயது 19). என்பவர் பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வருகிறார். வேலைக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவரங்கம் கீரிக்கல்மேடு பகுதியைச் சேர்ந்த நடராஜன் (வயது 58) என்பவரை காணவில்லை. இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.