Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:கொலை முயற்சி ஈடுபட்ட தந்தை மகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை.

0

 

திருச்சியில், கொலை முயற்சி வழக்கில் தந்தை மகன் இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விமானநிலையம் அருகே காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 42). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் சரவணகுமாரை எச்சரித்தனர். ஆனால் அதையும் மீறி கள்ளதொடர்பு தொடர்ந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் சகோதரன் பாஸ்கரன் (30), அவரது தந்தை உபகாரன் (59) இருவரும், கடந்த 2019 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி, சரவணகுமாரின் வீட்டுக்கு சென்று தாக்கினர். மேலும் சரவணக்குமாரை அரிவாளால் வெட்டியும் கத்தியால் குத்தியும் அவரை கொலை செய்ய முயன்றனர்.
இந்த தாக்குதலைக் கண்டு சரவணகுமாரின் குடும்பத்தினர் கூச்சலிட்டதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் திரண்டதும் இருவரும் தப்பியோடிவிட்டனர். பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து, சரவணக்குமாரின் மகன் கர்ணன் கொடுத்த புகாரின் பேரில், விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இது குறித்து திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.

இந்நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை உபகாரன் மகன் பாஸ்கரன் இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மீனாசந்திரா தீர்ப்பளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.