எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளையொட்டி அமைப்பு செயலாளர் ரத்தினவேல் தலைமையில் விழியிழந்தோர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளையொட்டி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,கழக அமைப்பு செயலாளருமான ரத்தினவேல் தலைமையில் திருச்சி மன்னார்புரம் விழிப்புணர்வு ஊர்வலம், ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி பிறந்தநாள் கொண்டாட்டம்.
தமிழக முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு,
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,, அதிமுக அமைப்புச் செயலாளருமான ரத்தினவேல் தலைமையில்,
திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள, விழி இழந்த மகளிர் மறுவாழ்வு மையத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும், மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும் என பிரார்த்தனை செய்து, விழி இழந்த பெண்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள, கங்காரு ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லத்தில், ஆதரவற்ற முதியோர்க்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இதில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன்,பகுதி செயலாளர்கள் கலைவாணன்,
எம்.ஆர்.ஆர்.
முஸ்தபா,நிர்வாகிகள் 60 வது வட்ட செயலாளர் மகேந்திரன், ,வசந்தகுமார்,கமால் மற்றும் கழக நிர்வாகிகள்,
தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.