Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: தண்டவாளத்தை கடக்க முயன்ற புரோட்டா மாஸ்டர் தவறி விழுந்து சாவு.

0

 

திருச்சியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற புரோட்டா மாஸ்டர் சாக்கடையில் தவறி விழுந்து சாவு.

திருச்சி குப்பாங்குளம் கண்ணன் ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50.) இவர் சம்பவத்தன்று அந்தப் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்பொழுது அவர் தண்டவாளத்தின் அருகாமையில் சென்றபோது மின்னல் வேகத்தில் ஒரு ரெயில் வந்து கொண்டிருந்தது.அந்த ரெயிலை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் பதட்டத்தில் அங்கிருந்து ஓடினார். இதில் எதிர்பாராத விதமாக தவறி தண்டவாளத்தின் ஓரத்தில் உள்ள சாக்கடையில் தவறி விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது அக்கம் பக்கத்தினர் ராஜேந்திரனை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் புரோட்டா மாஸ்டர் ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார்

இந்த சம்பவம் குறித்து தில்லை நகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.