குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை.
திருச்சி மணப்பாறை
கே.பெரியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி (வயது 32) பெயிண்டர்.
இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்த நிலையில் வழக்கம்போல் மது போதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவி ராஜேஸ்வரி அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில் வீட்டின் அறை கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மின்விசிறியில் மனைவி துப்பட்டாவில் தூக்கில் தொங்கினார்.
அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து தீபன் சக்கரவர்த்தியை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.