திருச்சி கே.கே நகரில் தனியார் பள்ளி உரிமையாளர் வீட்டில் நகை பணம் கொள்ளை.
திருச்சி கே.கே.நகர் அம்மையப்பன் நகரை சேர்ந்தவர் நஸ்ரத்பேகம். இவர் பீமநகரில் ஓவியப்பள்ளி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு இவர் சென்று விட்டார். இந்நிலையில் மர்ம நபர்கள் அவரது வீட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர் .
இது குறித்த புகாரின் பேரில் கே.கே நகர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.