திருச்சி புத்தூரில் கோலாகலம்:
குழுமாயி அம்மன் கோவில் குட்டி குடித்தல் திருவிழா.
புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் நேற்று குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடந்தது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குழுமாயி அம்மன் கோவில் திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த 22-ந் தேதி கோவிலில் காப்பு கட்டப்பட்டது. கடந்த 6-ந் தேதி இரவு மறுகாப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு காளியாவட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை 2 மணிக்கு புத்தூர் மந்தைக்கு அம்மனை பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர் 5 மணி அளவில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு சுத்தபூஜை நடந்தது. தொடர்ந்து அம்மன் ஓலைபிடாரி அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. குட்டிக்குடித்தல் அப்போது பக்தர்கள் வீடுகள் தோறும் தேங்காய், பழம், பூ சாற்றி வழிபட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நேற்று (வியாழக்கிழமை) நடந்தது.
ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டன.
ஆடுகளின் ரத்தத்தை மருளாளி குடித்தார். இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்ததால் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.