திருச்சி டாஸ்மாக் பாரில் அளவுக்கு அதிகமாக குடித்த வாலிபர் சாவு.
அளவுக்கு அதிகமாக மது குடித்த வாலிபர் திருச்சி டாஸ்மாக் பாரில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி பிராட்டியூர் கிழக்குத் தெரு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேம்படி. இவரது மகன் பிரசாந்த் (வயது 28). குடிப்பழக்கம் உடையவர். திருமணமாகவில்லை. இவர் திருச்சி-திண்டுக்கல் சாலையில் கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் பகல் முழுவதும் இருந்து மது அருந்தி உள்ளார். அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் மயங்கி விழுந்தார்.
உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கன்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிந்து போலி (கரூர் சரக்கு)மது அருந்தியதால் உயிர் இறந்தாரா? அல்லது அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உயிர் இழந்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்