தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி
திருச்சி புத்தூர் வெளியில் விழி இழந்தோர் பள்ளியில் தில்லை நகர் பகுதி திமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க,ஸ்டாலின் பிறந்தநாள் இன்று திருச்சி மத்திய மாவட்டத்தில் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி தி.மு.க சார்பில் கொண்டாடப்பட்டது.
இதேபோல் தில்லை நகர் பகுதியில் தி.மு.க சார்பில் புத்தூர் விழியிழதோர் பள்ளியில் தில்லைநகர் பகுதி செயலாளரும் கவுன்சிலருமான கே.எஸ்.நாகராஜ் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் தில்லை நகர் பகுதியில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் பகுதி அவைத்தலைவர் முத்துகிருஷ்ணன், 5-வதுமண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன், கவுன்சிலர் விஜயலட்சுமி சரவணன், பகுதி நிர்வாகிகள் பாண்டியன், புகழேந்திரன் ,வட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், கந்தசாமி, பிரேம்குமார், தலைமை கழக பேச்சாளர்கள் ராதாகிருஷ்ணன், புத்தூர் ஆனந்தன், இடிமுழக்கம் செல்வராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.