திருச்சியில் குடிக்கு அடிமையான வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை &கழிவறையில் பிணமான பெட்ரோல் பங்க் ஊழியர்.
திருச்சி உறையூர்:
கழிவறையில் பிணமாக கிடந்த பெட்ரோல் பங்க் ஊழியர்
மற்றொரு சம்பவத்தில் வாலிபர் தூக்கு போட்டு சாவு.
திருவரங்கம் வடக்கு கோப்பு மேலத்தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் பாலசுப்பிரமணியன். (வயது 38). இவர் திருச்சி கே.டி.ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்தார். நேற்று பணி முடிந்த உடன் அருகிலுள்ள ஓய்வு அறைக்கு குளிப்பதற்காக சென்றார். நீண்ட நேரம் ஆகியும் இவர் வரவில்லை. உடனே பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பாலசுப்பிரமணியன் கழிவறையில் விழுந்த நிலையில் கிடந்தார் .உடனடியாகஅவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து பாலசுப்பிரமணியனின் தாய் திரும்பாயி கொடுத்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2.)
வாலிபர் தூக்கு போட்டு சாவுதிருச்சி தென்னூர் சங்கீதபுரத்தைச் சேர்ந்தவர் மகிமை ராஜ். இவரது மகன் மரிய ஜோன் (வயது 33). குடி போதைக்கு அடிமையான இவர் மனைவியை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் ரோஷி கொடுத்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.