திருச்சி:கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த வாலிபர் கைது.
திருச்சி பாகனூரை சேர்ந்தவர் கணேஷ் குமார் (வயது 25). இவர் நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார் .
அப்பொழுது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவருடைய மொபைல் போனை பறித்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து ஞானசேகர் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் புதுக்கோட்டையை சேர்ந்த ஜோயல் ( வயது 19) என்ற வாலிபரை கைது செய்தனர்.