Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் குறைந்த விலையில் தங்க நகை தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி.மர்ம கும்பல் தலைமறை.

0

'- Advertisement -

 

குறைந்த விலைக்கு நகை வாங்க சென்ற
திருச்சி வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி
6 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை.

Suresh

திருச்சி பாலக்கரை ஆசாத் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் தங்க நகைகளை வாங்கி வேறு வியாபாரிகளுக்கு கைமாற்றி வரும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பால்ராஜ் என்பவர் பாலசுப்பிரமணியனிடம் சென்று தன்னிடம் 100 கிராம் தங்க நகைகள் உள்ளன. அதற்கு ரூ.5 லட்சம் கொடுத்தால் விற்பனை செய்வதாக தெரிவித்தார். இதனை கணக்கு போட்டு பார்த்த போது பாலசுப்பிரமணிக்கு ரூ. 1 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைப்பதாக இருந்தது. உடனடியாக ரூ. 5 லட்சம் கொடுத்து அந்த 100 கிராம் நகைகளை வாங்கினார்.

பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் பால்ராஜ் அவரை தொடர்பு கொண்டார். அப்போது தங்களிடம் 200 கிராம் நகை இருப்பதாக கூறினர். பின்னர் அதற்கு ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் விலை பேசப்பட்டது.
அதன் பின்னர் பாலசுப்ரமணி ரூ.
10 லட்சத்து 50,000 பணத்தை எடுத்துக்கொண்டு பால்ராஜ் கூறிய மணப்பாறை மஞ்சம்பட்டி அருகே உள்ள சந்தன மாதா கோவில் பகுதிக்கு சென்றார். அங்கு பால்ராஜ், வினோத் மதுரையை சேர்ந்த சிவா மற்றும் 3 பேர் காரில் உட்கார்ந்திருந்தனர்.
பின்னர் அந்த நபர்கள் பாலசுப்பிரமணியிடம் இருந்த ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை வாங்கி எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் காருடன் தப்பி ஓடி விட்டார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலசுப்ரமணி உடனடியாக மணப்பாறை போலீசில் புகார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோசடி பேர்வழிகளில் பால்ராஜ் மட்டுமே சுப்பிரமணிக்கு அறிமுகமான நபராக உள்ளார். மற்ற 6 பேர் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை.
குறைந்த விலைக்கு நகை வாங்க சென்ற வியாபாரியிடம் நூதன முறையில் ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் பறித்துவிட்டு தப்பிச்சென்ற செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.