துறையூர் வங்கி முன்பு சம்பவம்
மோட்டார் சைக்கிளில் வைத்த ரூ. 1லட்சத்து 15 ஆயிரம் திருட்டு
மர்ம நபருக்கு போலீஸ் வலை.
பெரம்பலூர் மாவட்டம் டி. களத்தூர் எல்லையம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 45). இவர் துறையூர் பகுதியில் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் துறையூர் அலமார தெருவில் உள்ள ஒரு வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை மணிகண்டன் எடுத்தார். பின்னர் அந்த பணத்தை ஒரு பையில் வைத்து வங்கி முன்பு நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்தார். அதன் பின்னர் மீண்டும் நண்பரை பார்க்க வங்கிக்குள் சென்றார். பின்னர் சிலர் நிமிடங்கள் கழித்து வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் பணத்தை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. அதை தொடர்ந்து மணிகண்டன் துறையூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் வங்கி முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.