Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

துவரங்குறிச்சியில் பைக் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்திருந்த ஒரு லட்சம் திருட்டு.

0

 

இருசக்கர வாகனத்தில் டேங்க் கவரில் வைத்திருந்த
ரூ.1 லட்சம் திருட்டு.

 

திருச்சி மருங்காபுரி முத்தல்வார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்.இவரது மகன் பாண்டியன் (வயது 28). இவர் துவரங்குறிச்சியில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்.மில் ரூ.1 லட்சம் பணத்தை எடுத்தார். பின்னர் அந்த பணத்தினை தனது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துவிட்டு வீடு திரும்பினார்.

செல்லும் வழியில் அங்குள்ள ஓர் பேக்கரி முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் வாங்க சென்றார். ஸ்னாக்ஸ் வாங்கிக்கொண்டு திரும்பிய போது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.

ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதை பின் தொடர்ந்து நோட்டமிட்டு மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்று விட்டதை அறிந்து அதிர்ந்தார்.

இதுகுறித்து பாண்டியன் துவரங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.