Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பெற்றோர் படிக்க வற்புறுத்தியதால் பள்ளி மாணவன் திடீர் மாயம்.

0

 

திருச்சியில் பள்ளி செல்ல மறுத்த பிளஸ் 1 மாணவன் திடீர் மாயம்.

திருச்சி பொன்மலைப்பட்டி ஜே.ஜே.நகரைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் கோகுலகண்ணன் ( வயது 17 ).இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறான் .

தனக்கு படிக்க விருப்பமில்லை. நான் வேலைக்கு செல்கிறேன் என்று பெற்றோரிடம் அவன் கூறியுள்ளான். ஆனால் பெற்றோர் நீ வேலைக்கு செல்ல வேண்டாம். ஒழுங்காக படி என்று கூறி சத்தம் போட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற கோகுலக்கண்ணன் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை முனியசாமி கொடுத்த புகாரின் பேரில் பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.