திருச்சி புத்தூரில்
லாட்டரி விற்ற
வாலிபர் கைது.
திருச்சி புத்தூர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து புத்தூர் நால்ரோடு பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் ராஜ் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு ஓட்டல் அருகே நின்று கொண்டு லாட்டரி சீட்டுகள் விற்றதாக ராஜ்குமார் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்களும்,
பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.