திருச்சி பெரிய கடைவீதியில் வழிப்பறி செய்த வாலிபர் கைது.
திருச்சி பெரிய கடை வீதி பெரிய சௌராஷ்ட்ரா தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார். ( வயது 50). இவர் பெரிய கடைவீதி சௌராஷ்ட்ரா தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் இவரது சட்டைப்பையில் இருந்த பணத்தை அபேஸ் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்த புகாரின் பெயரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு மணிகண்டன் ( வயது 26) என்ற வாலிபரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் வடக்கு தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.