மோட்டார் சைக்கிள் திருட்டு,
கரூர் காவல்காரன் பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் பிரபாகரன் (வயது 24). இவர் தென்னூர் அக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோவில் அருகே தனது நண்பர் வீட்டிற்கு சென்றார் .

அங்கு நண்பரின் வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு திரும்பி வந்து பார்க்கும்போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இது குறித்து தில்லை நகர் காவல் நிலையத்தில் பிரபாகரன் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தாயுமான் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.