
திருச்சி பெல் ஐஎன்டியுசி புதிய நிர்வாகிகள் பட்டியலை அகில இந்திய தலைவர் சஞ்சீவ ரெட்டி அறிவித்துள்ளார்.
அகில இந்திய ஐஎன்டியுசி தலைவர் டாக்டர் சஞ்சீவி ரெட்டி புதிய நிர்வாக குழுவை அங்கீகாரம் செய்துள்ளார் .
அதன்படி அவர் வெளியிட்டுள்ள பட்டியல் விவரம் வருமாறு :-
கௌரவத் தலைவராக டாக்டர் சஞ்சீவி ரெட்டி, தலைவராக கிருஷ்ணசாமி வாண்டையார்,
செயல் தலைவராக கல்யாணகுமார், பொதுச்செயலாளராக அந்தோணி அலெக்ஸ் திரவியம், பொருளாளராக இளமுருகு செல்வன், செயலாளராக விஜயகுமார்,
துணைப் பொதுச் செயலாளராக நமச்சிவாயம் , அமைப்புச் செயலாளராக மதன்குமார்,
துணை அமைப்புச் செயலாளராக சக்திவேல், ஆலோசகர்களாக விஜயன், பாலசுப்பிரமணியன், மூத்த துணை தலைவர்களாக ஆனந்த், இளையராஜா , புரோமின் ராஜரீகம் ,பிரபாகரன், பாலு மற்றும் துணை தலைவர்கள் இணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் ஐஎன்டியுசி தொழிற்சங்கம் சார்பில் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.





