Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான தோப்பில் 1008 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு.

0

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் :

திருச்சி No1 டோல்கேட் பிச்சாண்டர்கோயில் அருகில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான 1.70 ஏக்கர் தோப்பு (ஆழ்வார் தோப்பு) உள்ளது .

இங்கு தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதலின்படியும் , இந்து சமய அறநிலைய அமைச்சர் அவர்களின் அறிவுரைப்படியும் இந்த தோப்பை சமன்படுத்தி 1008 மரக்கன்றுகளை நட்டனர் ,

ஸ்ரீரங்கம் கோயில் அர்ச்சகர் சுந்தர்பட்டர் ஈசான்ய மூலையில் பூஜை நடத்தப்பட்டது,

சென்னையை சேர்ந்த உபயதாரர் தெய்வ ஜோதி என்பவர் உபயமாக அளித்த 1008 மரக்கன்றுகளிலில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முதல் மரக்கன்றாக ஸ்ரீரங்கம் கோயில் தலவிருட்சமான புண்ணணமரக் கன்றை நட்டும்,

திருச்சி – பெரம்பலூர் மாவட்டங்களின் மண்டல இணை ஆணையரான அரங்க.சுதர்சன் நாகவல்லி மரக்கன்றை நட்டு வைத்தும் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கோயில் மேலாளர் உமா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.