சுகாதாரகேடு ஏற்படுத்தும் இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். திருச்சி மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் மீன்கடைகள் , கோழி கடைகள் இறைச்சி கடைகளில் உள்ள கழிவுகளை ஆங்காங்கே உள்ள நீர்நிலைகள் , காலி இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் இரவு நேரங்களில் கொட்டி சுகாதார கேடு ஏற்படுத்துவதாக பொது மக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளது .
2. இதை தவிர்க்கும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் உள்ள நுண்உர செயலாக்க மையங்களில் இறைச்சி கழிவுகளை பெறுவதற்கென பிரத்யோக வசதியுடன் தொட்டி வைக்கப்பட்டுள்ளது .
அனைத்து இறைச்சி கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளில் தினசரி சேரும் இறைச்சி கழிவுகளை அருகிலுள்ள நுண்உர செயலாக்க மையங்களில் தங்களது சொந்த பொறுப்பில் நேரடியாக கொண்டு வந்து பதிவு செய்து ஒப்படைக்க வேண்டும் .
3. இறைச்சி கழிவுகளை மேற்கண்ட நுண்உரம் செயலாக்க மையங்களில் ஒப்படைக்காமல் பொது இடங்கள் , நீர் நிலைகள் , காலி இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் கொட்டும் இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன் இறைச்சி கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அவர்கள் எச்சரித்துள்ளார் .