Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மதிப்பெண்களை வைத்து பள்ளி மாணவிகளிடம் பாலியால் அத்துமீறல் . விசாரனையில் அதிர்ச்சி தகவல்.

0

சென்னை எம்.ஆர்.சி நகரில் அமைந்துள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் படித்த தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.

அந்த புகாரில், பள்ளி நிர்வாகிகள் பாலியல் ரீதியாகவும், உடல் அமைப்பை வைத்தும் தகாத வார்த்தைகளால் திட்டி மாணவிகளை துன்புறுத்தியதாகக் கூறப்பட்டிருந்தது.

மேலும், இதுதொடர்பாக பல ஆண்டுகளாக புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் தரப்பில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்து இருந்தனர்.

இதையடுத்து புகார் தொடர்பாக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது.

இதனையடுத்து செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் முதல்வர் உட்பட 5 நிர்வாகிகள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜராகினர். அவர்களிடம் ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாணவிகளிடம் மதிப்பெண்களை வைத்து ஆசிரியர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்ததுள்ளது.

இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.