Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொரோனாவிற்க்கும், ஊரடங்கிற்கும் விரைவில் முற்றுபுள்ளி. முதல்வர் மு.க.ஸ்டாலின் .

0

'- Advertisement -

மக்களை அச்சுறுத்தும் வகையில் பரவி வரும் கொரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறி உள்ளதாவது:-

மக்கள் கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடித்தால் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

Suresh

ஆக்ஸிஜன் அளவு 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை: வழிகாட்டு நெறிமுறை

கொரோனாவால் அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.

அதற்காக மாதம் 2 ஆயிரம் வீதம் இரு மாதங்களுக்கு 4 ஆயிரம் வழங்கப்படுகிறது. 13 பொருள்கள் அடங்கிய தொகுப்பும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இதனை இப்படி நீட்டித்துக்கொண்டிருக்க முடியாது.ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது. கொரோனா பரவலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

மக்களை காக்கும் மகத்தான பணியில் என்னை நான் ஒப்படைத்துள்ளேன். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையே தேவை. தமிழக அரசு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசாக செயல்படும்.
கொரோனாவை வெல்வோம்!
நமக்கான வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம்!

என கூறி உள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.