Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உங்களில் ஒருவன் நான், எப்போதும் போல் பணியாற்றுவேன். மா.செ. வெல்லமண்டி நடராஜன் அறிக்கை

0

திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.கழக செயலாளர் வெல்லமண்டி.ந. நடராஜன், அவர்களின் செய்தி அறிக்கை.

நம் நெஞ்சங்களில் வாழும் மறைந்த தமிழக முதல்வர் அம்மா காட்டிய வழியில் முன்னாள் முதல்வர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் எடப்பாடி K. பழனிச்சாமி மற்றும் முன்னாள் தமிழக துணை முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க திருச்சி மண்டல பொறுப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளருமான R.வைத்திலிங்கம், அவர்களின் வழிகாட்டுதளின்படி நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராகிய எனக்கு வாக்களித்த வாக்காள பெருமக்கள், கழகத்தினர். கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள், அனைத்து சமுதாய மக்கள், வாக்களிக்காத வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றியோ, தோல்வியோ எதுவாயினும் நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன். உங்களுடனேயே பயணிப்பேன். எப்போதும் போலவே என் மக்கள் பணி தொடரும். நான் எப்போதும் உங்களில் ஒருவன் தான். உங்களுக்கான ஒருவன் தான்,

என திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.